Tamil News
Home செய்திகள் கோட்டாபாயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

கோட்டாபாயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

தன்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து சர்வதேச சக்திகள் அகற்றியதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த குற்றச்சாட்டு நகைப்புக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடை நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை .அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்வதில்லை” என்றார்.

”தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கோட்டாபய
ராஜபக்ஷ குறிப்பிடுவது நகைப்புக்குரியது” என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தாா்.

Exit mobile version