கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் – ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

கோட்டாபாய வீட்டின் முன் படை குவிப்பு - pathivu

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை குறிக்கும் விதத்திலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காராகளிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை உருவானதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

நுகேகொடை பகுதியில் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.