Tamil News
Home செய்திகள் கோட்டாபயவின் சிம்மாசன உரையால் தமிழ் மக்களுக்கு பேரிடி! கூட்டமைப்பு கவலை

கோட்டாபயவின் சிம்மாசன உரையால் தமிழ் மக்களுக்கு பேரிடி! கூட்டமைப்பு கவலை

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்த விடயமும் குறிப்பிடப்படாமல் இருந்தமை கவலைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஒற்றையாட்சிக்கான நிகழ்ச்சி நிரல், பெளத்த மதத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவரது பேச்சில் இருந்தன.

ஆனால் ஏனைய மதங்கள் தொடர்பாகவோ அவற்றுக்கு இருக்கும் பிரச்சினை தொடர்பாகவோ எந்த விடயமும் பேச்சில் இருக்கவில்லை.

இனங்களுக்கான பிரச்சினைகளை தள்ளிவைத்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்தும் நீர்பூத்த நெருப்பாகவே இருந்துவருகின்றது.

அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் ஜனாதிபதியின் உரையில் இல்லாமல் இருந்தமை கவலைக்குரிய விடயமாகும் என்று கூறினார்.

Exit mobile version