கொழும்பு துறைமுகப் பணியாளர்கள் பத்தாயிரம் பேரின் வேலைகள் கேள்விக்குறியில்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை வெளிநாடுகளுக்கு வழங்குவதால், துறைமுகத்தில் பணிபுரியும் 10ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களின் தொழில் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க கேட்டுள்ளார்.