கொழும்புக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; பல பகுதிகளில் திடீர் ஊடரங்கு அமுலானது

கொரோனா பரவல் தீவிரமடைந்து கொழும்புக்குள்ளும் ஊடுருவியிருக்கும் நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இதனை அறிவித்தார். மறுஅறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றிரவு முதல் திங்கட்கிழமை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.