கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் 2023ஆண்டில் நிறைவடையும் என்று இந்தத் திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் தலைமை அதிகாரி கஸ்யப்ப செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
காணிகளை நிரப்பும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 3கிலோமீற்றர் தூரத்தை கொண்ட கடல் நீர் தடை நிர்மாணிப்பதில் 99 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. நிதி நகரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 130 கோடி அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.