கொரோனோவிற்கு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பலி

யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான சிவரஞ்சினி ஆனந்த குமாரசுவாமி (61) கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ் அரியாலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கோவிட்-19 சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை (28) யாழ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.