Tamil News
Home செய்திகள் கொரோனா வைரஸ் – 780 பேர் மரணம், 38,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு

கொரோனா வைரஸ் – 780 பேர் மரணம், 38,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவின் வூகன் மாகாணத்தில் இருந்து ஆரம்பமாகி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு இதுவரையில் 780 பேர் பலியாகியுள்ளதுடன், 38,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸின் பாதிப்பானது 2000 ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் எனப்படும் வைரஸ் இன் பாதிப்பபை விட அதிகமானது.

சீனாவின் குபேய் மாகாணத்தில் 81 பேர் நேற்று (08) இறந்துள்ளனர். அதேசமயம் யப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் தலா ஒருவர் இந்த நோயின் தாக்கத்தால் இறந்துள்ளனர்.

சார்ஸ் வைரசின் தாக்கத்தால் 774 பேர் ஒரு வருட காலப்பகுதியில் பலியாகியிருந்தனர், ஆனால் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் குறுகிய காலத்தில் 780 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Exit mobile version