கொரோனா வைரஸ் தொற்று – ஓரின சேர்க்கையாளர்கள் மீது குற்றச்சாட்டு

ஒரே பாலினத்தவர்களிடையே நடைபெறும் திருமணங்கள் காரணமாக கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என  பீட்டர் டெய்ட் என்ற அரசியல் வாதியின் கருத்து அந்நாட்டில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தொகுதியில் நடைபெறும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக  பீட்டர் டெய்ட் என்ற அரசியல்வாதி போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், உள்ளூர் பத்திரிகையான The Shetland Times , அவரிடம் நடத்திய நேர்காணலின் போது,

“கடவுள் விரும்பும் விஷயங்களை நான்  பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.  நான் கூறும் கருத்துக்கள் எனது மத நம்பிக்கைகளின் அடிப்படையிலானது.

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணங்களை நான் ஆதரிக்கவில்லை, நடைபெறும் தேர்தலில் நான் இதற்கு எதிராக போராடுவேன். கொரோனா வைரஸ் பரவல் கூட ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தால் தான் ஏற்பட்டிருக்கும்.   மேலும் இப்படி கருத்து கூறுவதால் தனக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்.

பீட்டர் டெய்ட்டின் கருட்துக்கள் குறித்து LGBTQ உரிமை ஆர்வலர்கள் கூறுகையில் இப்படி ஒரு பார்வையை கொண்டிருக்கும் அவர் உண்மையில் ஒரு மடையர் என குறிப்பிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவல், ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஒரு காரணம் என்ற அவரது அபத்தமான நம்பிக்கை ஒரு ஆபத்தான சதி கோட்பாடு மட்டுமல்ல, ஓரின சேர்க்கையாளர்களின் வெறுப்பை தூண்டவும் முடியும் மற்றும் நிச்சயமாக சமத்துவ சட்டம் 2010 ஐ இது மீறுகிறது என்றார்.