கொரோனா வைரஸ்: ஒரே நாளில்1,52,734 பேர் இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும்  ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சசகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலின் வேகம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு விகிதம் சரிந்ததாகத் தெரியவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 இலட்சத்து 83 ஆயிரத்து 135 பேரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.