கொரோனா வைரஸ் எதிரொலி: சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து இலங்கைக்கு சுற்றுலாக் குழுக்களை அனுப்புவதை சீனா நிறுத்தியுள்ளது. சீனத் தூதரகத்தின் அதிகாரிகள் இலங்கை குடிவரவு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது இதனை உறுதிப்படுத்தினர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டுக்குச் சுற்றுலாக் குழுக்களை அனுப்புவதை தாம் நிறுத்தியுள்ளனர் என்று சீன அதிகாரிகள் தங்களுக்குத்தெரிவித்தனர் எனக் குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பாகுபாடு காட்டப்படுவதற்குக் காரணம் பயங்கரவாத வைரஸ்தான். சில ஹோட்டல்களும் வணிக நிறுவனங்களும் தங்கள் நாட்டினரைத் திருப்பி விடுகின்றன என்று சீன அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதுபோன்ற அச்சங்கள் தேவையற்றவை என்று அவர்கள் குடிவரவு அதிகாரிகளுக்கு உறுதியளித்திருந்தனர்.