கொரோனா வைரஸால் வீடுகளிலேயே மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது.

இம்மாதம் 20ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் (25) வரை பதிவான 221 கொரோனா மரணங்களில், 54 மரணங்கள் வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளன.

அவர்களில் 22 பேரின் மரணங்கள் கடந்த நாட்களில் (24,25) பதிவாகியுள்ளன.

இதேவேளை, மக்கள் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்பட்டால், அடுத்த சில வாரங்களுள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலப்பகுதியிலும் அதன் பின்னரும் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமையே இதற்கான காரணமாகும். இந்தநிலையில், மக்கள் சரியாக நடந்து கொண்டால் சில வாரங்களில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்