கொரோனா பெருந்தொற்று: இந்தோனேசியாவில் அகதிகளிடையே அதிகரிக்கும் தற்கொலை

கொரோனா பெருந்தொற்று: இந்தோனேசியாவில் அகதிகளிடையே அதிகரிக்கும் தற்கொலை

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகெங்கும் அகதிகளை மீள்குடியமர்த்தும் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலினால் இந்தோனேசியாவில் வசிக்கும் சுமார் 14,000 அகதிகளிடையே தற்கொலை நிகழ்வது அதிகரித்து காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை இந்தோனேசியாவில் 6 அகதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 13 அகதிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.