Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி – உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி – உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 504 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 3 இலட்சத்து 40 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது.

இந்த தடுப்பூசியை இங்கே தயாரித்து வினியோகிக்க  புனேயின் இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கோவேக்சின்.

இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கூறிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதலை அளித்தது. ஒப்புதல் கிடைத்ததால், விரைவில் இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை  உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே நேரம், பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே இந்தியா திடீரென அனுமதி வழங்கிய கோவேக்சின் தடுப்பூசி குறித்து நிபுணர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Exit mobile version