கொரோனா: உயிரிழப்புகளும் நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிப்பு- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

இலங்கையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்து வருவதாக   இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், “கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  உயிரிழப்புகள் 28 வீதத்தினால் அதிகரித்துள்ளன என்றார்.

மேலும் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையும் என்றும் அவர்  நம்பிக்கை  வெளியிட்டுள்ளார்.