கொரோனா அச்சம் – 40,000 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 40,000 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தெற்கு ஐரோப்பாவிலிருந்து 9,800 க்கும் மேற்பட்டவர்கள் வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலை காரணமாக வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு தேடுவதற்காக ஜோர்டான், கட்டர் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்  கூறினார்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து இலங்கையரை மீள அழைக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை  முதல் ஆரம்பமாகவுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.