Tamil News
Home செய்திகள் கொரோனா அச்சம்- தபால் சேவைகள் இடைநிறுத்தம்

கொரோனா அச்சம்- தபால் சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல பகுதிகளுக்கான தபால் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு  தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன் படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள், காலியில் உள்ள பிரதான மற்றும் துணை தபால் நிலையங்கள், குளியாபிட்டிய தபால் நிலையம்,மற்றும் குருணாகல் மாவட்டத்தின் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கும் தபால் நிலையங்கள் மற்றும் பல முக்கிய துணை தபால் நிலைய சேவைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளன.

அது மாத்திரமின்றி மத்திய தபால் பரிமாற்றம் தபால் திணைக்களத்தின் பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version