கொரோனாவை சூழலில் மற்றொரு ஆபத்து: செயல்படாத அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ

கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ மெல்ல செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீக்கும் செர்னோபில் அணு உலைக்கும் 2 கி,மீ தொலைவே இருப்பதாக அதனை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

அதிகாரிகள் நினைப்பதைவிட அங்கு பெருந்தீ எரிந்து கொண்டிருப்பதாக க்ரீன் பீஸ் அமைப்பு கூறுகிறது. 1986 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அணு உலை விபத்தை அடுத்து மக்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. செயல்படாத அணு உலையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில்தான் மக்கள் வசிக்கிறார்கள். காட்டுத்தீயை அடுத்து ஏப்ரல் 5ஆம் தேதி உக்ரைன் சூழலியல் கண்காணிப்பு சேவை அமைப்பு ரேடியேசன் அளவு அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்தது.

300 தீயணைப்பு படை வீரர்கள் பகலிரவு பாராமல் தீயை அணைக்க பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.