கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான்

சீனாவிற்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க இராணுவம் தான் என சீன வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (zhao lijian) வெளியிட்ட ருவிற்றர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ஆம் திகதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுகூடத்தில் 60 வயதான பெண்ணிற்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்தப் பெண் வூகானில இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார் என்றும் அவர் மூலம் அவர் கணவருக்கும் அந்நோய் பரவி பின்னர் இருவரும் குணமடைந்தனர் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.