கொரோனாவை கட்டுப்படுத்த ரஷ்யா உதவ வேண்டும் – தூதுவரிடம் சஜித் கோரிக்கை

இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ரஷ்யா உதவ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யத் தூதுவர் யு_ரி மட்டேரியை சந்தித்த வேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு நடமாடும் மருத்துவமனைகள், பிசிஆர் இயந்திரங்கள், தீவிர கிசிச்சை பிரிவு, கட்டில்கள் போன்றவற்றை வழங்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றாவது கொரோனா வைரஸ் அலை காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியான காலத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டில்கள், பிசிஆர் இயந்திரங்கள் போன்றவற்றிற்கான அவசரத்தேவை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன் எனவும் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சி கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.