கொரோனாவால் மற்றொருவரும் மரணம்; இலங்கையில் பலியானோர் தொகை 12 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் இலங்கையில் மரணமானவர்களின் எண்ணிக்கை இன்று 12 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை திரும்பியிருந்த பெண்ணொருவர் கொரனாவால் மரணமாகியுள்ளார்.

47 வயதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணே கொரனா தொற்றுக்கும் உள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலையில் இன்று காலை மரணமாகியுள்ளார். இதன் காரணமாக இலங்கையில் கொரனாவால் ஏற்பட்ட மரணம் 12 ஆக அதிகரித்துள்ளது.