Tamil News
Home செய்திகள் கைத்தொலைபேசி ஊடான தேர்தல் பிரச்சாரத்திற்கு சிங்களக் கட்சிகள் முயற்சி

கைத்தொலைபேசி ஊடான தேர்தல் பிரச்சாரத்திற்கு சிங்களக் கட்சிகள் முயற்சி

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கைத்தொலைபேசி ஊடாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பரப்புரைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

“எம்மால் முடியும்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொலைபேசி அப்ஸ் ஊடாக இந்த பிரச்சார வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த பணிகள் இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகும் எனவும் அதன் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் நாள் அரச தலைவர் வேட்பாளரை தாம் அறிவிக்கவுள்ளதாகவும், தற்போது உலகில் உள்ள தொழில் நுட்பங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version