கூட்டமைப்பின் தேசப்பற்றை புகழ்ந்த மகிந்த

தான் அழைப்பு விடுத்த கூட்டத்தை பல சிங்களக் கட்சிகள் புறக்கணித்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்து கொண்டது சிறீலங்கா தேசம் மீதான அவர்களின் பற்றை காண்பிப்பதாக சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா நேற்று (5) தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நடந்த பிரத்தியோக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்பதற்கே தற்போது இந்த கூட்டம் கூட்டப்பட்டது. பலர் இதனை புறக்கணித்தபோதும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் ஆர் சம்பந்தன் தலைமையில் கலந்துகொண்டது அவர்களின் பொறுப்புணர்ச்சியையும், சிறீலங்கா தேசம் மீதான நம்பிக்கையையும் காட்டுகின்றது. எனவே அவர்களுக்கு நான் எனது சிறப்பு நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.