கூட்டமைப்பின் கூட்டத்தில் தாக்குதல்; ஆர்னோல்ட் உரையாற்றிய போது போத்தல் வீச்சு

சுழிபுரத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் போத்தல்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுழிபுரம் கள்விலான் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் யாழ் மாநகர முதல்வருமான இமானுவேல் ஆர்னோல்ட் பேசிக்கொண்டிருக்கும்போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சிலர் போத்தல்களை வீசித் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.