கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; 4 வைத்தியசாலையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்விபயின்றுவரும் 4 மாணவர்கள் மீது சம்பவதினமான நேற்று இரவு 2 ஆம் ஆண்டில் கல்விபயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர் .