Tamil News
Home செய்திகள் கிழக்கில் உருவாகிய ”தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம்“

கிழக்கில் உருவாகிய ”தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம்“

கிழக்கில் தமிழர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு பல புத்திஜீவிகள் ஒன்றிணைந்து “தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையத்தை“ ஆரம்பித்துள்ளனர்.

தமது அமைப்பு குறித்தும், எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க என ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் எல்லாமே இறுதியில் அரசியல் கட்சியாக தோற்றமெடுத்தது. எனவே இதனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் சாராத ஒரு அமைப்பு நீண்ட நாட்களாக இல்லாதிருந்தது. இந்தக் குறையைத் தீர்க்கவே கிழக்கிலுள்ள புத்திஜீவிகள் பலர் ஒன்றிணைந்து 08.06.2019இல்   தமிழர்களின் நலன்கள் தொடர்பாக ஆராய்வதற்காக “தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் நோக்கங்களாக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வடக்கு கிழக்கு மக்களின் கல்வி, பொருளாதார, காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், சிவில் சமூக அமைப்புகளை இணைத்து மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தல், பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவை இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version