பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

27 பாதுகாப்பு அமைவிடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மக்களிற்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.