Tamil News
Home உலகச் செய்திகள்  காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்- மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

 காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்- மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”முடிவை நோக்கிய ஒரு பேச்சு வார்த்தைக்கு, சாதகமான சூழலை” உருவாக்குவது அவசியமானது என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று பாகிஸ்தான் தினத்தை ஒட்டி இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ழுதிய கடிதத்தில், “ஒரு அண்டை நாடாக, பாகிஸ்தானுடன் சுமுகமான உறுவுகளை  இந்தியா விரும்புகின்றது. இதற்கு பயங்கரவாதமும், பகைமையும் இல்லாத ஒரு நம்பிக்கை அளிக்கும் சூழல் அவசியம்” ன்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் படிதத்திற்கு பதில் அளித்து கடிதம் எழுதிய பிரதமர் இம்ரான்கான்,“பாகிஸ்தானும், இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, கூட்டுறவு உறவுகளை விரும்புகிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “ தெற்கு ஆசியாவில் நீடித்த அமைதியும் , நிலைத் தன்மையும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லா பிரச்சினைகளையும் , குறிப்பாக ஜம்பு காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதை சார்ந்திருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version