கால்பந்து மன்னர் பெலே காலமானார்

பிரேஸிலின் ‘கறுப்பு முத்து’ என வர்ணிக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே தனது 82 ஆவது வயதில் நேற்று (29) காலமானார். 

கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார்.

1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும்.

கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை  இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 1970 என மூன்று முறை பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் அவர் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.