காற்றில் பரவும் புதிய கலவையான கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது என அரசாங்க கூட்டம் ஒன்றில் வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய திரிபு “மிக ஆபத்தானது” என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார்.