Tamil News
Home செய்திகள் காரசாரமாக நடைபெற்ற சஜித் அணியின் கூட்டம்-வெளியேற்றப்பட்ட முஷாரப் எம்.பி.

காரசாரமாக நடைபெற்ற சஜித் அணியின் கூட்டம்-வெளியேற்றப்பட்ட முஷாரப் எம்.பி.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலிருந்து, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முஷாரப் எம்.பியும் கலந்துகொண்டார். எனினும், “20” ஆவது திருத்தச் சட்டவரைவில் இருந்த இரட்டைக் குடியுரிமை சரத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்பை வெளியேற்ற வேண்டும் என மரிக்கார் வலியுறுத் தினார். இதற்கு ஏனைய எம்.பிக்களும் ஆதரவு வழங்கினர்.

இதனையடுத்தே ரிஷாத் கட்சி உறுப்பினர் வெளியேற்றப்பட்டார்.

Exit mobile version