Tamil News
Home செய்திகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு நடைமுறை- அரசாங்க அதிபர்

காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு நடைமுறை- அரசாங்க அதிபர்

காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி கடந்த ஒரு வார காலமாக பூரண முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில், கடந்த நாட்களாக எமது பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

எனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன், இது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் எடுத்துள்ளனர்.

இதன்படி  இராணுவ பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் .வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமை ஆக்கப்படும். அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Exit mobile version