Tamil News
Home செய்திகள் காணாமலாக்கப்பட்ட தமது மகளைத் தேடிவந்த மற்றொரு தந்தையும் நேற்று மரணம்

காணாமலாக்கப்பட்ட தமது மகளைத் தேடிவந்த மற்றொரு தந்தையும் நேற்று மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார்.

காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களைக் கடந்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டு தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடி வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது-69) என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

Exit mobile version