இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் இன்றையதினமும் 10 ஆமைகள், ஒரு டொல்பின் , கடற்பறவைகள், மற்றும் பெருமளவு மீன்கள் என்பன இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
මියගිය කැස්බෑවන් 03 දෙනෙකුගේ සිරුරු කොස්ගොඩ වෙරළ තීරයෙන් සහ මියගිය ඩොල්ෆින් මත්යසයෙකුගේ සිරුරක් ඉදුරුව වෙරළ තීරයෙන් අද (06) දහවල් හමුවි ඇත #Galle #lka #SriLanka #XPressPearl pic.twitter.com/xPzX3GzXCP
— Farhaan Nizamdeen (@greatgalle) June 6, 2021
இந்துருவா, கொஸ்கொட, பயகலா, வட்டுவா மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளிலேயே இவை கரை ஒதுங்கியுள்ளன.
இந்த உயிரினங்களின் இறப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.