Tamil News
Home செய்திகள் கட்சித் தலைவர்களைக் கூட்டுகின்றார் மஹிந்த – மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவு

கட்சித் தலைவர்களைக் கூட்டுகின்றார் மஹிந்த – மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவு

மாகாண சபைகளுக்கான தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இத்தகவலை நேற்றுத் தெரிவித்தார். ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் அனைத்தும் இந்தத் தேர்தலை இணைந்தே சந்திக்கும் எனத் தெரிவித்த அவர், தனித் தனியாக தேர்தலை சந்திப்பதற்கான சூழ்நிலை இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

மாகாண சகைளுக்கான தேர்தல்களை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விவகாரத்துக்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version