ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வுகள் இன்று புதன்கிழமையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர்.

unnamed 1 3 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

unnamed 2 3 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

unnamed 3 3 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

unnamed 10 ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முக தேர்வுகள் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.

இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரை நேர்முகம் காண்பதற்கு இணைந்துக்கொண்டமை சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.