குழந்தை உட்பட யாழில் இன்று 100 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் ஒன்றரைவயது பெண் குழந்தை உட்பட்ட தொற்றாளர்கள் 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் தொற்றாளர்கள் 48பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர் (10 வயது சிறுவன், 12 வயதுச் சிறுமியும் உள்ளடக்கம்)

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் (5 வயதுச் சிறுவனும் உள்ளடக்கம்)

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், (ஒன்றரை வயதுப் பெண் குழந்தை, 9, 14 வயதுகளைஉடைய சிறுவர்களும் உள்ளடக்கம்)

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆயவுகூட முடிவுகளின் அடிப்படையில்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேரும்,

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில்,11 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.