Tamil News
Home செய்திகள் ஒக்ரோபர் 16இல் பலாலி விமான சேவை!

ஒக்ரோபர் 16இல் பலாலி விமான சேவை!

ஒக்டோபர் 10ஆம் திகதியளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடையும். ஒக்டோபர் 16ஆம் திகதி இங்கிருந்து விமான போக்குவரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து இந்தியாவுக்கு ஆரம்பிக்கப்படும் விமான பயண சேவைகளை வழங்கும் போது தேசிய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை தவிர்த்து, மத்தள, இரத்மலானை, மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக தரமுயர்த்தப்படும்.

இந்த விமான நிலையங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, பிராந்திய மற்றும் சர்வதேச விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படும். ஒக்டோபர் 10ஆம் திகதியளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடையும். 16ஆம் திகதி விமான போக்குவரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

பலாலி விமான நிலையத்தை சார்ந்த தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது, வட பகுதி மக்களுக்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்படும். என தெரிவித்தார்.யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாக இன்று பிற்பகல் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version