எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று 14.09.2019 வவுனியா வடக்கில்
முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது ஓமந்தை,கனகராயன்குளம்,புளியங்குளம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் இவ் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 10மணியிலிருந்து மாலை 2.30மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
,தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.