எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பலவும் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.

இதேவேளை எழுக தமிழ் – 2019 எழுச்சிப் பேரணிக்கான பரப்புரைகள் சூறாவளி வேகத்தில்  நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வட மாகாண மினிபஸ் உரிமையாளர்கள் சங்கம், மரபுரிமைப் பேரவை, கடற்றொழிலாளர் சம்மேளனம், உள்ளிட்ட பல அமைப்புக்களுடன் பேரணிக் கான பரப்புரைக்குழு சந்திப்புக்களை நடத்தி வருவதுடன், அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Eluga tamils எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்இதேவேளை நேற்று மாலை பத்தி எழுத்தாளர்களுடனான சந்திப்பு தமிழ் மக்கள் பேரவையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.