எழுக தமிழுக்கு வடக்கு கிழக்கு ஆயர்களும் பூரண ஆதரவு

எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவிருக்கும் இருக்கும் எழுக தமிழ் நிகழ்விற்கு வடக்கு கிழக்கு ஆயர்கள் பங்கு தந்தையினர் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்தகாலங்களில் யுத்தத்திற்கு முன்பும் பின்பும் தமிழ் மக்களினுடைய அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் வரைக்கும் இராஜப்பு ஜோசப் அவர்களினதும் ஏனைய ஆயர்கள்,குருக்கள் பங்குத்தந்தையினர் அனைவரும் ஜனநாயக போராட்டங்களிற்கு தமது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியிருந்தார்கள் என்பது மறுக்கமுடியாத உன்மை அதேபோல் எதிர்வரும் எழுக
தமிழ் நிகழ்விற்கும் ஆயர்கள் தங்களது பூரணமான ஒத்துழைப்பை
வழங்கயிருக்கிறார்கள் என்பதுடன் ஏற்கனவே இந்து மத குருமார் ஒன்றியமும் தங்களது முழுமையான ஆதரவை பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.