Tamil News
Home செய்திகள் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் பேரணி

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து துவிச்சக்கர வண்டி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த துவிச்சக்கர வண்டி பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் ஜெபநேசன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version