எமது தாய்நாட்டின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்;சுவிஸ் தூதரகம் முன் இராணுவ அதிகாரி உணாவிரதம்

கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர்  அஜித் பிரசன்ன
சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் ஏந்தியிருந்த பதாகையில் ‘எமது தாய்நாட்டின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்’ , ‘குறித்த பெண்ணை காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுக்க விடுங்கள்’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.