Tamil News
Home செய்திகள் எதிர்வரும் வருட நடுப்பகுதியிலேயே தடுப்பு மருந்து கிடைக்கும்

எதிர்வரும் வருட நடுப்பகுதியிலேயே தடுப்பு மருந்து கிடைக்கும்

எதிர்வரும் வருடத்தின் நடுப்பகுதியிலேயே கொரோனோ வைரசிற்குரிய தடுப்பு மருந்து பாவனைக்கு வரும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 வரைஸ் நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துக்காக 180 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் மூன்றாவது கட்டத்திலேயே தற்போது உள்ளது. அதன் பின்னர் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த பின்னரே மருந்தை விநியோகம் செய்யமுடியும். எனவே அது அடுத்த வருடத்தின் நடுப்பகுதியிலேயே சாத்தியமாகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரசின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் சாந்தியங்கள் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தடுப்பு மருந்துகள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வழக்கப்படும் எனவும் உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version