எங்களுக்கு தடுப்பூசி வேண்டாம், பண உதவி செய்யுங்கள்: ஆப்கான் அகதிகள்

பாகிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக பண உதவியைச் செய்ய வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஏனெனில், அவர்கள் வசிக்கும் முகாம்களில் கொரோனா தொற்றோ அல்லது அத்தொற்றினால் உயிரிழந்தவர்களோ இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள 54 முகாம்களில் சுமார் 14 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வசித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.