“எங்களுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை!” – கூண்டுக் கிளிகளாக முகாம்களில் வாழும் தமிழர்கள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாம்களில் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுரிமை இல்லாமலும், இந்தியக் குடியுரிமை இல்லாமலும் தவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய அரசு, ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையும், ஓட்டுரிமையையும் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில் போர் நடந்த காலங்களில், இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட தமிழர்கள் தாய் மண்ணான தமிழ்நாட்டுக்கு அகதிகளாக திரும்பிவந்தனர்.

இவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசுகள், தமிழகம் முழுவதும் அகதிகளுக்காக 114 முகாம்களை திறந்தன. இவற்றில் தற்போது சுமார் ஒரு இலட்சம் நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: புதிய தலைமுறை