எகிறிச் செல்லும் கொரோனா மரணங்கள் – நேற்று மட்டும் 48 பேரை காவுகொண்ட தொற்று

இலங்கையில் கொரோனாவால் மேலும் 48 பேர் மரணமானதாக சுகாதாரப் பிரிவினரால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் அதிகளவானவர்களின் மரணம் இலங்கையில் பதிவாகியிருப்பது இதுதான் முதன் முறையாகும்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் தொகை 1,656 ஆக அதிகரித்துள்ளது.