இன்று 10 ஆம் திகதி உலக நாடுகளில் ஊழி திரைப்படம் உலகம் முழுவதிலும் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை இதுவரை தராமையினால் இலங்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தீர்மானிக்க முடியவில்லை என்றும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.
எமது ஊழி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை பிரிவிற்கு ஊழி திரைப்படம் சமர்பிக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி தணிக்கைக்காக திரைப்படத்தை பார்வையிட இருந்த போதும் 8ஆம் திகதியே தணிக்கை குழுவால் திரைப்படம் பார்வையிடப்பட்டது.
கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் என்று இயக்குனா் ரஞ்சித் ஜோசப் தெரிவித்தாா்.