Tamil News
Home செய்திகள் ஊரடங்கை மீறிய 16 பேர் வவுனியாவில் கைது.

ஊரடங்கை மீறிய 16 பேர் வவுனியாவில் கைது.

கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றயதினம் வவுனியா பொலிசாரால் 16பேர் கைதுசெய்யபட்டுள்ளனர். ஊரடங்குவேளையில் அவசியமின்றி வீதிகளில் திரிந்தமைக்கா அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 பேர் எச்சரிக்கை செய்யப்பட்டபின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் அவசியமின்றி வீதிகளில் திரிந்த 30 ற்கும் மேற்பட்டவர்கள் வவனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தியவசிய சேவைகளை மேற்கொள்வோருக்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிபத்திரம் பொலிசாரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Exit mobile version