Tamil News
Home செய்திகள் ஊரடங்கை மீறிய இருவர் வவுனியாவில் கைது

ஊரடங்கை மீறிய இருவர் வவுனியாவில் கைது

வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை நேற்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்துள்ளனர். பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தித் தப்பிச் சென்றனர்.

அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் குழுவினர் அந்த இருவரையும் துரத்திச் சென்று பூங்கா வீதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறிப் பயணித்தமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்த இருவரையும் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Exit mobile version